மசிவன் பதிப்பகம்
ஓங்கிப் பிடியும் உயர்ந்த எழுதுகோலை
தாங்கிப் பிடிக்கும் அதன்தோளில் - வாங்கிப்
படியும் மசிவன் பதிப்பக நூலை
நொடியினில் பூக்கும் அறிவு - மசிவன்
எண்ணங்களை எழுத்தாக்க நினைக்கும் எவர்க்கும் ஈன்ற உதவியினைச் செய்வதற்காய் தொடங்கப்பட்ட நிறுவனம். சுயமாய் விதைத்து, ஊன்றி, முட்டி முளைத்து வளர்வது எளிதான செயலன்று. மனித உயிர்கள் நான்கு விதமான அடிப்படைத் திறன்களைத் தனக்குள் கொண்டிருக்கின்றன. புத்தகத்தில் அத்திறன்கள் அனைத்தும் ஒருசேரப் பொருந்தியிருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் ஆய்வு சார்ந்த கருத்தரங்கம் நடத்துவதும் அதனை நூலாக அச்சிடுவதும் பதிப்பகத்தின் இன்றியமையாப் பணியாகும். அச்சு ஊடகமாக மட்டுமன்றி இணையவழியிலான மின்னூலாகவும் பதிப்புப் பணியை முன்னெடுத்துள்ளோம். எந்தவொரு இலாப நோக்குடன் இயங்காமல் நூலாசிரியர்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வருகிறது. வாருங்கள்! வாசிப்போம்! நேசிப்போம்! சுவாசிப்போம்.